ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
கே.பாலசந்தர் இயக்கிய டூயட் படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ். அதன்பிறகு கல்கி படத்தில் கதையின் நாயகனாக நடித்த பிரகாஷ்ராஜ், பின்னர் தமிழ், தெலுங்கு படங்களில் குறுகிய காலத்தில் முன்னணி வில்லனாகி விட்டார். அதோடு, தான் தமிழில் அறிமுகமான முதல் படத்தின் பெயரில் டூயட் மூவீஸ் என்ற பட நிறு வனத்தை தொடங்கி சில படங்களை தயாரித்த பிரகாஷ்ராஜ், சில படங்களை தானே இயக்கியும் நடித்தார்.
இந்தநிலையில், இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு பிரகாஷ்ராஜின் தென்னிந்திய சினிமா மார்க்கெட் சரிவடைந்து விட்டதாக கூறப்பட்டு வந்தது. இதுபற்றி அவர் கூறுகையில், இப்போதும் நான் தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்தி படங்கள் வரை பரவலாக நடித்து வருகிறேன். பிரியதர்ஷன் இயக்கும் படத்தை அடுத்து தமிழில் வேலைக்காரன், ரிச்சி தெலுங்கில் ரங்கஸ்தலம், மகாநதி, மலையாளத்தில் ஓடியன் என பரவலாக நடித்து வருகின்றேன். இதுதவிர பல படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அந்த வகையில், 2019ம் ஆண்டு வரை நான் ரொம்ப பிஸி என்கிறார் பிரகாஷ்ராஜ்.