ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரேமம் சாய் பல்லவி இப்போது தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். மலையாளத்தைப்போலவே தெலுங்கில் அவர் நடித்த பிடா படமும் ஹிட்டாக அமைந்ததோடு சாய்பல்லவிக்கு அதிகப்படியான ரசிகர்களை உருவாக்கிக்கொடுத்தது. அதனால் அதையடுத்து நானியுடன் எம்சிஏ படத்தில் உடனடியாக கமிட்டாகி நடித்தார். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்தில் கதையின் நாயகியாக நடிப்பவர், அதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கவிருக்கும் மாரி-2 படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது தெலுங்கில் சர்வானந்த் நடிக்கும் ஹனு ரகவாபுடி என்ற படத்திலும் நடிக்கிறார். பிடாவைப்போலவே ரொமான்டிக் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடக்கிறது. அதனால், கரு படப்பிடிப்பு முடிந்ததும் வெகு விரைவில் ஹனு ரகவாபுடி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் சாய்பல்லவி.