ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கும் படம் பொதுநலன் கருதி. "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" படத்தில் அறிமுகமான சந்தோஷ் ஹீரோவாகவும், புதுமுகம் அனுசித்தாரா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கருணாகரன், ஆதித் அருண், யோக் ஜேப்பி, சுபிக்ஷா, லிஸா, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் சீயோன் கூறியதாவது:
பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக்கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திடம் தங்களின் ஒட்டுமொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடமிருந்து அன்பையும் நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே பொது நலன் கருதி என்கிறார் இயக்குனர் சீயோன்.