ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள நடிகரும், பிரபல நடிகர் பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நரகாசூரன்' படத்தில் 'லட்சுமன்' என்கிற முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மலையாள படங்களில் இவர் அதிகம் ஏற்று நடித்த போலீஸ் வேடம் தான் இதிலும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தனின் 'சர்வம்' படத்தில் ஆர்யாவின் நண்பராக தலைகாட்டியவருக்கு தமிழில் இது இரண்டாவது படம்..
இந்தப்படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்ட இந்திரஜித், “நரகாசூரன் படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம்.. புதிய சினிமா மொழியில் இதன் கதையும் பட உருவாக்கமும் அமைந்துள்ளது. பார்வையாளர்களை பல ஆச்சர்யங்களுக்கு இந்தப்படம் ஆளாக்கும்” என படத்தை பற்றி சிலாகித்து பேசியுள்ளார் இந்திரஜித்.