ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த வெள்ளியன்று நயன்தாரா நடித்த 'அறம்' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஆழ்துளாய் கிணற்றில் விழுந்த குழந்தைகளை காப்பாற்ற நிரந்தர தீர்வு கண்டுபிடிக்க முடியாத முக்கியமான பிரச்னையை மிகவும் தைரியமாக சொல்லியிருந்தார் இயக்குனர் கோபி நயினார்.
இதில் கலெக்டராக நடித்திருந்த நயன்தாராவின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது., திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபாலும் 'அறம்' படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அமலாபால் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது...
“ஆக.. நல்ல படம் ஜெயிக்கும் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இயக்குனர் கோபி நயினார், நயன்தாராவுக்கு எனது பாராட்டுக்கள். ஸ்டார் ஹீரோக்களுக்காக மசலாத்தனாமாக பண்ணப்படும் படங்கள் நிறைந்த இந்த சினிமாவில் அந்த பார்முலா தவறு என நிரூபித்துள்ளது இந்தப்படம். நல்ல சினிமா, நல்ல கதை, நல்ல நடிப்பு, இதுதான் முக்கிய விஷயமே” என சந்தடி சாக்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களையும் 'உரசி'யிருக்கிறார் அமலாபால்.