ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
பொதுவாக வட இந்திய நடிகைகள் யாருமே தமிழ்ப்படங்களில் நடிக்கும்போது சொந்தக்குரலில் டப்பிங் பேச ஆர்வம் காட்டுவதில்லை. ஜோதிகா பிசியான நடிகையாக இருந்தபோது மாயாவி படத்தில் சொந்தக்குரலில் பேசினார். அதன் பிறகு சொந்தக்குரலில் பேசி நடித்த வட இந்திய நடிகை தமன்னாதான்.
இருபத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார் தமன்னா. அவர் சொந்தக் குரலில் பேசி நடித்த ஒரே படம் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான 'தர்மதுரை' படம்தான். இந்த படத்தை தொடர்ந்து தமன்னா நடிப்பில் 'தேவி', 'கத்திச்சண்டை' ஆகிய படங்கள் வெளியாகின. அவற்றில் எல்லாம் தமன்னாவுக்கு இரவல் குரல்தான்.
இந்த படங்களை தொடர்ந்து இப்போது விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' என்ற படத்தில் நடித்துள்ளார் தமன்னா! விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டப்பிங் உட்பட படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தற்போது வேலைகள் நடந்து வருகின்றன. 'தர்மதுரை'யில் சொந்த குரலில் பேசி நடித்த தமன்னாவுக்கு இப்படத்தில் மானசி என்ற டப்பிங் கலைஞர் குரல் கொடுத்துள்ளார்.
'தர்மதுரை'யில் அழகாக தமிழ் பேசி நடித்த தமன்னா ஏன் தொடர்ந்து சொந்தக் குரலில் பேசி நடிக்கவில்லை?