ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி பி.ஏ.பெரிய நாயகி. அவர் முதல் பின்னணி பாடகியானது சுவையான ஒரு நிகழ்வின் மூலம்தான்.
ஏ.வி.எம் நிறுவனம் 1945ம் ஆண்டு ஸ்ரீவள்ளி படத்தை தயாரித்தது. இதில் டி.ஆர்.மகாலிங்கமும், குமாரி ருக்மணியும் நடித்தனர். படத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. படம் முடிந்து படப்பெட்டிகள் எல்லா தியேட்டர்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்த தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு குமாரி ருக்மணியின் பாடல்கள் திருப்தியாக இல்லை. டி.ஆர்.மகாலிங்கத்தின் கணீர் குரலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை.
இதனால் தியேட்டர்களுக்கு அனுப்பபட்டிருந்து படப் பெட்டிகள் அனைத்தையும் திரும்ப கொண்டுவருமாறு உத்தரவிட்டார். அப்போது பாடகியும், நடிகையுமாக இருந்த பி.ஏ.பெரிய நாயகியை அழைத்து ருக்மணி பாடிய அனைத்து பாடல்களையும் அவரை பாடச் செய்தார். அப்போதுதான் போஸ்ட் சிங்க்ரனைசன் என்ற பதிவு தொழில்நுட்பம் அறிமுகமாகியிருந்தது. அந்த தொழில்நுட்பத்தின் மூலம் ருக்மணி பாடல்களுக்கு பதிலாக பிலிமில் பி.ஏ.பெரிய நாயகியின் பாடலை சேர்த்து படப்பெட்டிகளை திரும்ப அனுப்பினார். படம் பெரிய வெற்றி வெற்றது. பெரிய நாயகி முதல் பின்னணி பாடகி ஆனார்.
பி.ஏ.பெரிய நாயகி 'கீதகாந்தி', 'பஞ்சாமிர்தம்', 'என் மனைவி', 'மனோன்மணி', 'மகாமாயா' 'பிரபாவதி', 'கிருஷ்ண பக்தி', 'தர்மவீரன்', 'ஏகம்பவாணன்', 'ருக்மாங்கதன்' உட்பட பல படங்களில் நடித்திருந்தார். புதிய இளம் நடிகைகள் வருகைக்கு பிறகு நடிப்பிலிருந்து விலகி பாடகியாக மட்டும் இருந்தார்.