மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தை திட்டமிட்டு படமாக்காமல், சகட்டுமேனிக்கு படமாக்கிவிட்டு கடைசியில் எடிட்டிங்கில் திணறிப்போகிறார்கள் இயக்குநர்கள். சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அந்தப் படத்தை இயக்கும்போதே இரண்டு பாகங்களாக வெளியிடப்போவதாக அறிவித்தார். ஆனால், ஏஏஏ படம் படு தோல்வியடைந்ததால் ஏஏஏ-2 படம் ட்ராப்பானது.
அதேபோல் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் வேலைக்காரன் படம் பைனல் புட்டேஜ் நாலரை மணி நேரப்படமாக இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. இதன் காரணமாக அப்படத்தின் எடிட்டர் மாற்றப்பட்டிருக்கிறார். இதேபோல் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.
துருவ நட்சத்திரம் படத்தை உருவாக்கி வரும் இயக்குநர் கௌதம் மேனன் அப்படத்தை எடிட் செய்து பார்த்தபோது இரண்டரை மணி நேரத்தில் கதையைச் சொல்ல முடியாது என்பது தெரிந்து புதிய முடிவை எடுத்திருக்கிறார். அதாவது, துருவ நட்சத்திரம் படத்தை பாகுபலி பாணியில் தொடர்ச்சியாக 3 பாகங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
துருவ நட்சத்திரம் படத்தின் முதல் பாகத்தில் இப்படத்தின் வில்லன் யார் என்ற கேள்வியோடு முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.