ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் மெர்சல். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றதால் படம் திரைக்கு வந்தபோது கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. அதையடுத்து விஜய்யின் பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு அவர் மீது மதச்சாயமும் பூசப்பட்டது. பின்னர் அவரும் தான் வெளியிட்ட அறிக்கையில் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்படியாக ஒரு பத்து நாட்களாக மெர்சலுக்கு எதிர்ப்பு அலையடித்து பின்னர் ஓய்ந்தது. இதன்காரணமாக மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பான அதிரின்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியது. அதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விடவும் அதிகப்படியான தியேட்டர்களில் படத்தை வெளியிட தயாரானார்கள்.
ஆனால், தெலுங்கு பதிப்பிற்கான சென்சார் சான்று முடிவடையவில்லை. இதன்காரணமாக அதிரின்டியை ரிலீஸ் பண்ணயிருந்தவர்களும், ஒரு சிறிய கேப் கொடுத்து விட்டு சான்றிதழ் வந்த பிறகு படத்தை வெளியிடுவது குறித்து முடிவு செய்யலாம் என்று தணிக்கை சான்றிதழுக்காக காத்திருக்கிறார்கள்.