இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
சிம்புவை வைத்து இயக்குவதாக இருந்த கான் படம் டிராப்பான நிலையில், அடுத்து எஸ்.ஜே.சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கினார் செல்வராகவன். அந்தப் படத்தைத் தயாரித்த கௌதம் வாசுதேவ் மேனனும், எஸ்கேப் மதனும் கடன் பிரச்சனையில் சிக்கியிருப்பதால் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறாராம் செல்வராகவன்.
இதற்கிடையில் தனுஷை வைத்து ஒரு படம் பண்ண நினைத்தார். தனுஷோ இப்போதைக்கு கால்ஷீட் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டாராம். இதனால் மேலும் அப்செட்டில் இருந்த செல்வராகவனுக்கு கை கொடுத்திருக்கிறார் சூர்யா.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் 36ஆவது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம் இதுதான்.
சூர்யாவின் தம்பி கார்த்தி பங்குதாரராக உள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் முதல் படம் இது. ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்திலிருந்து வெளியேறிய சூர்யா, 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் சொந்தக் கம்பெனியை தொடங்கினார். கார்த்தியும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்திலிருந்து வெளியேறி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஆனார்.