ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, ஒய்.ஜி.பார்த்சாரதி நடத்திய அமெச்சூர் நாடக சபாவின் ஆஸ்தான ஹீரோயின். எல்லா நாடகங்களிலும் நடித்து வந்தார். அப்போது தாயாருடன் செல்லும் ஜெயலிதாவை சிறு சிறு வேடங்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இதேபோல நடிகர் சோவும் தனது நாடக சபா சார்பில் ஆங்கில நாடகங்கள் போட்டுக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்கு அப்போது 13 அல்லது 14 வயதிருக்கும். அப்போது சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய நடிகைகள் மிகவும் குறைவாக இருந்தார்கள். அதனால் சோ, ஜெயலலிதாவை தனது ஆங்கில நாடகங்களில் நடிக்க வைத்தார்.
ஒரு முறை சோவின் ஆங்கில நாடகத்தை பார்க்க எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அதில் ஜெயலலிதாவின் நடிப்பையும், ஸ்டைலையும் பார்த்து மிரண்டு போன எம்.ஜி.ஆர், சினிமாவில் ஜெயலலிதாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினார். இதற்காக அவரது தாயார் சந்தியாவிடம் அனுமதியும் பெற்றார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்தியும், டெஸ்ட் சூட் நடத்தியும் பார்த்தபோது ஜோடிப் பொருத்தம் சரியாக இல்லை. நடுத்தர வயதில் இருந்த எம்.ஜி.ஆருக்கு பக்கத்தில் குட்டி சிறுமியாக தெரிந்தார் ஜெயலலிதா. இதனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நிராகரித்து விட்டார். சில வருடங்களுக்கு பிறகு ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலிதாவின் தோற்றத்தை கண்டு எம்.ஜி.ஆர் பின்னர் அவரை தனது ஆஸ்தான ஹீரோயினாக்கிக் கொண்டார்.