ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பருவமழை துவங்கியுள்ள நிலையில் எண்ணூர், கொசஸ்தலை கழிமுகத்தில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகள், மற்றும் ஆக்கிரமிப்புகளை ஆகற்றாவிட்டால் வட சென்னை வெள்ளக்காடாகும் என்று நேற்று கமல் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் வெறும் வாய் வார்த்தையோடு நின்று விடாமல் களத்தில் இறங்கி வேலை பார்க்க துவங்கியுள்ளார்.
ஆம், இன்று காலையிலேயே கமல், எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் பார்வையிட்டார். சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அந்தப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அரசியல் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் கமல், இதுநாள் வரை டுவிட்டரில் அறிக்கையாகவும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியாகவும் கொடுத்து வந்த கமல், இப்போது நேரடியாக களத்தில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார். இனி அடுத்தடுத்து இதுபோன்று பல பிரச்னைகளை கமல் கையிலெடுத்து ஆய்வு மேற்கொள்வார் என கமல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலெக்டர் விளக்கம் : இந்த சூழ்நிலையில், திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி, எண்ணுார் துறைமுக பகுதியில், 200 இடங்கள் வெள்ள பாதிப்பு இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இருந்தால் அவை அகற்றப்படும் என, விளக்கம் அளித்துள்ளார்.
கமல் நன்றி : சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது என கமல் டுவிட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார்.