ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'மெர்சல்' நாயகி சமந்தாவிற்கும், நடிகர் நாகசைதன்யாவிற்கும் இந்த மாதத் துவக்கத்தில் கோவாவில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள திருமணம் நடைபெற்றது. அதன் பின் சமந்தா அவர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'ராஜு காரி கதி 2' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்தப் படத்தில் அவருடைய மாமனார் நாகார்ஜுனாவும் நடித்திருந்தார். படம் வெற்றி பெற்று நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சமந்தா நடித்த 'மெர்சல்' படம் கடந்த வாரம் வெளிவந்து தற்போது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் பற்றி படம் வெளியான மறுநாள் வாரம் மட்டுமே சமந்தா டுவீட் செய்திருந்தார். டுவிட்டரில் பரபரப்பாக இயங்கும் சமந்தா கடந்த ஒரு வாரமாக அமைதியாக இருக்கிறார். இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் முகம் காட்டாமல் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார் சமந்தா.
டோலிவுட் வட்டாரங்களில் விசாரித்ததில் அவர் கணவர் நாகசைதன்யாவுடன் இங்கிலாந்தில் தேனிலவில் இருக்கிறார் என்றார்கள். தனிப்பட்ட விஷயம் என்பதால் இது பற்றி சமந்தாவும், நாகசைதன்யாவும் எதுவும் சொல்லவில்லை.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று விட்டு இந்தியா திரும்ப உள்ளார்களாம். வந்ததும் இருவருமே அவரவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார்களாம்.
சமந்தா தற்போது தமிழில் 'சூப்பர் டீலக்ஸ், இரும்புத் திரை, நடிகையர் திலகம், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் படம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.