ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'சாமி' திரைப்படம் 2003ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் ஒரு ஆக்ஷ்ன் படமாக இருந்தாலும் விக்ரம், த்ரிஷா இடையிலான காதல் காட்சிகள் ரசிகர்களை அதிகமாகக் கவர்ந்தன.
த்ரிஷாவுக்கு முதன் முதலில் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த படம் 'சாமி' படம் தான். அந்தப் படத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்து அவரைச் செல்லமாக அப்போது 'மாமி' என்று அழைத்தவர்கள் அதிகம். அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. அந்தப் படத்தின் வெற்றியே அவரை முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் அவரைக் கொண்டு சேர்க்க காரணமாக அமைந்தது.
14 வருடங்கள் கழித்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 'சாமி ஸ்கொயர்' தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாம் பாகத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க த்ரிஷா முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. விரைவில் த்ரிஷாவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று இப்படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவித்தார்.
விரைவில் படப்பிடிப்புக்குச் செல்ல உள்ள நிலையில் த்ரிஷாவின் விலகல் அதிர்ச்சியான ஒன்று தான். இத்தனை வருடங்களாகியும் த்ரிஷா கைவசம் நாயகியாக தற்போது ஐந்தாறு படங்கள் உள்ளன. இந்த நிலையில் 'சாமி ஸ்கொயர்' படத்தில் கீர்த்தி சுரேஷுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என்று த்ரிஷாவுக்கு தெரியாதா என்ன?. என்ன ஒன்று, இந்த முடிவை அவர் எப்போதோ எடுத்திருக்க வேண்டும். இருந்தாலும் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நிறைவாக செய்ய முடியும் என்பது சந்தேகம்தான்.