ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த 'மயக்கம் என்ன', தரணி இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்த 'ஒஸ்தி' ஆகிய இரண்டே இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய. இரண்டே படங்களில், அதுவும் தோல்விப் படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய கிளாமரான தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக இருந்தார் ரிச்சா. அந்தப் படங்கள் வெளிவந்து ஆறு வருடங்கள் ஆகப் போகிறது. அதன் பின் தெலுங்கில் பிரபாஸ், ரவி தேஜா, நாகார்ஜுனா ஆகியோரது படங்களில் நடித்தார் ரிச்சா.
நான்கு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் எம்பிஏ படிப்பதற்காகச் சென்று விட்டார். தற்போது படிப்பையும் முடித்துவிட்டார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இருக்கும் அவரை அவ்வப்போது ரசிகர்கள் எப்போது மீண்டும் நடிக்க வருவீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள் போலிருக்கிறது.
நேற்று டுவிட்டரில் கடுமையான வார்த்தைகளுடன் இனி நடிக்க வர மாட்டேன் என்பதைச் சொல்லியிருக்கிறார். “திரைப்படங்களில் நடிப்பதை விட்டு வெளியே வந்து 5 வருடங்கள் ஆன பின்னும் என்னுடைய அடுத்த படம் என்ன என்று கேட்பவர்களுக்கு, கூகுள் உங்கள் நண்பன் தானே, அதோடு, 'பின்ட் டுவீட்' (டுவிட்டரில் முதலில் இருக்கும் நிலைத்தகவல்) பாருங்க. நான் வாழ்க்கையின் புதிய பகுதியில் இருக்கிறேன். அதில் நடிப்பதற்கான லட்சியம் எதுவும் இல்லை.
நான் பதில் சொன்ன பிறகும் நான் என் மனதை மாற்றிக் கொள்வேன் என எதிர்பார்ப்பவர்களுக்கு நான் சத்தியம் செய்கிறேன். நடிப்பை விட்டதால் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேனா என்று பலர் கேட்பது அழகாக வெறுப்பூட்டுகிறது. வாழ்க்கையில் வேறு லட்சியங்கள் இருக்கக் கூடாதா?,” என்றும் அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். மீண்டும் நடிக்க வருவீர்களா என ரசிகர்கள் கேட்டதற்கு வெறுப்பாக பதிலளித்த ரிச்சா, அவருடைய டுவிட்டரில் மட்டும் 'முன்னாள் இந்தியத் திரைப்பட நடிகை' என்று வைத்துள்ளார்.