ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம், தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை இயக்கிவருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இவற்றில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு யார் இசை அமைக்கிறார் என்பதை இதுவரை வெளியிடவே இல்லை.
இந்த படத்தில் இடம்பெறும் 'மறுவார்த்தை பேசாதே...' என்ற சிங்கிள் டிராக்கை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டனர். அப்போது, அந்த பாடல் எழுதியவர் தாமரை, பாடியவர் சித்ஸ்ரீராம் என்ற தகவலை மட்டும் வெளியிட்டவர்கள், இசை அமைப்பாளர் பெயரை மிஸ்டர் எக்ஸ் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 'மறுவார்த்தை பேசாதே...' பாடலுக்கு இசை அமைத்தவர் யார் என்பது சஸ்பென்ஸாக இருந்து வந்தது.
இந்நிலையில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனே இசையமைத்துள்ளதாக ஒரு தகவலும், சசிகுமார் நடிப்பில் 'கிடாரி', 'பலே வெள்ளையத் தேவா' ஆகிய படங்களுக்கு இசை அமைத்த தர்புகா சிவா இசை அமைத்திருப்பதாக ஒரு தகவலும் வெளியானது.
'எனை நோக்கி பாயும் தோட்டா'விற்கு இசை அமைப்பவர் தர்புக சிவா என்பதை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தர்புக சிவா இசை அமைக்கும் மூன்றாவது படம் இது.
இந்த படம் தவிர 'பொன் ஒன்று கண்டேன்' என்ற படத்துக்கும் தர்புகா சிவா இசையமைத்து வருகிறார்.