ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மெர்சல் படத்தில் சர்ச்சைக்கு உள்ளான ஜிஎஸ்டி, டிஜிட்டல் உள்ளிட்ட காட்சிகளை நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். இப்படத்தில் ஜிஎஸ்டி., மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் படத்தில் ஜிஎஸ்டி., மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றார். இவரைப்போன்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க, மெர்சல் படத்தின் தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸின் முரளி ராமசாமி முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் அவர் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.