ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அரசாணை பிறப்பித்தது. அதன் படி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக 150 ரூபாயை வைத்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், சென்னையில் உள்ள பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணங்களை 150 ரூபாய்க்கு உயர்த்தவில்லை. அவர்கள் பழைய கட்டணமான 120 ரூபாய் கட்டணத்திற்கே டிக்கெட்டை விற்று வருகிறார்கள்.
கேளிக்கை வரி 12 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி 33 ரூபாய் ஆகிய இரண்டடையும் சேர்த்து 165 ரூபாய்க்கு மட்டுமே டிக்கெட்டை விற்கிறார்கள். தீபாவளியை வெளியிட்டு நேற்று வெளியான 'மெர்சல்' படத்திற்கும் இதே டிக்கெட் கட்டணத்தைத்தான் நிர்ணயித்துள்ளார்கள். தமிழக அரசு அறிவித்துள்ளபடி 150 ரூபாய் அதிகபட்ச கட்டணம் என்று வைத்துக் கொண்டால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 195 ரூபாய் வரை கட்டணம் இருக்கும். ஆனால், இப்படி வைத்தால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து பழைய விலையிலேயே டிக்கெட்டை விற்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, தயாரிப்பாளர் சங்கம் சார்பாக விஷால் அறிவித்தபடி பல ஊர்களில் கேன்டீன்களில் அதிகப்படியாக விற்கப்படும் தின்பண்டங்களைக் குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்டு சண்டை போடும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினால் கேன்டீனில் விற்கப்படும் தின்பண்டங்களை நியாயமான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்காரர்கள் தள்ளப்படுவார்கள். டிக்கெட் வருமானத்தை விட அவர்களுக்கு கேன்டீன் வருமானம் அதிகம் என்பதால் டிக்கெட்டை ஏற்றாமல் உள்ளார்கள் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று.