மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
சுந்தரபாண்டியன், குட்டிப்புலி படங்களின் பாணியில் சசிகுமார் தற்போது நடித்து வரும் படம் கொடிவீரன். முத்தையா இயக்குகிறார். மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, விதார்த், பால சரவணன் நடிக்கிறார்கள். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. படம் பற்றி சசிகுமார் கூறியதாவது:
அண்ணன் தங்கை பாசக் கதையில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. குட்டிப்புலி படத்தில் நடிக்கும்போது கிராமத்து பின்னணியில் அழகான ஒரு அண்ணன், தங்கை பாசக் கதை ஒன்று தயார் செய்யுங்கள் என்ற கூறியிருந்தேன். எனக்காக அவர் உருவாக்கியதுதான் கொடிவீரன் கதை. எனது தங்கையாக சனுஜா நடிக்கிறார். காதலியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். ஒரு முக்கியமான கேரக்டரில் பூர்ணா நடிக்கிறார். இரண்டு சீனுக்காக மொட்டை போட்டு நடித்துள்ளார் பூர்ணா. அவரது கேரக்டர் பட வெளியீட்டுக்கு பிறகு பேசப்படும்.
நான் கோவில் திருவிழாவில் குறி சொல்கிற கொடிவீரனாக நடித்திருக்கிறேன். தங்கை பேச்சுக்கு மறுபேச்ச பேசாத அண்ணன். படத்தில் வில்லன் என்று யாரும் கிடையாது. சூழ்நிலையும், கதாபாத்திரங்கள் எடுக்கும் சில தவறான முடிவுகளும்தான் வில்லன். சிவாஜி சாரின் பாசமலர் மாதிரி இதுவும் அண்ணன் தங்கை பாசத்தில் உருவ வைக்கும் நவீன பாசமலர். என்கிறார் சசிகுமார்.