ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மாசாணி என்ற படத்தின் மூலம் படத்துறைக்கு வந்த ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ், குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியடைந்தது. முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களை வாங்கி வெளியிட்டதன் மூலம் திரைப்படத்துறையில் கவனிக்கத்தக்க நிறுவனமாக விளங்கியது.
விஜய் நடித்த பைரவா படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் சில கோடிகள் நஷ்டப்பட்ட ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் அடுத்து பாகுபலி-2 படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை வாங்கியது. இதில் சில குளறுபடிகள் ஏற்பட்டு, பின்னர் அந்த பிரச்னைகள் எல்லாம் சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் பட விநியோகத்தில் மீண்டு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி மிஷ்கின் நடிக்கும் சவரக்கத்தி, சுசீந்திரன் இயக்கியுள்ள நெஞ்சிலே துணிவிருந்தால் ஆகிய படங்களின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.