மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' |
பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பன். இவரது வாழ்க்கை "மாரியப்பன்" என்ற பெயரில் சினிமாவாக உருவாக உள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, தனுஷ் தனது சொந்த பேனரில் தயாரிக்க உள்ளார்.
மாரியப்பன், திரு.வி.க., பூங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரிடத்தில் தனது வாழ்க்கை படம் குறித்து கேட்டபோது, அதற்கு பதிலளித்த மாரியப்பன்... என் வாழ்க்கை தொடர்பான படம் உறுதியாகவில்லை, இன்னும் பேச்சுவார்த்தை அளவில் தான் இருக்கிறது. என் வாழ்க்கையை படமாக என் உறவினர்கள் சிலர் எடுக்க இருப்பதாக வந்த தகவலும் முற்றிலும் பொய்யானது.
மாணவர்கள் காதலில் தோல்வியடைந்தால் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். அது தவறு என திரு.வி.க., பூங்கா படம் எடுத்துரைக்கிறது. நானும் காதலித்திருக்கிறேன். நான் காதலித்தது விளையாட்டை. சில நேரங்களில் எனக்கும் சில கஷ்டமான தருணங்கள் அமைந்திருக்கின்றன. அன்று நான் தவறான முடிவு எடுத்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன். நான் இன்றைக்கு இவ்வளவு தூரம் சாதித்ததற்கு என் அம்மா தான் முக்கிய காரணம். கஷ்டங்களை தாங்கினால் தான் வெற்றி பெற முடியும் என்றார்.