ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் மலையாள நடிகர் திலீப்புக்கு நான்காவது முறையாக ஜாமீன் மனு மறுக்கப்பட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டபோது முதன்முறையாக அங்கமாலி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு செய்து அது நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கேரள உயர்நீதிமன்றத்தால் இரண்டுமுறை திலீப்பின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அங்கமாலி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார் நடிகர் திலீப்..
அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஆனால் துரதிர்ஷடவசமாக இந்தமுறையும் அவரது ஜாமீன் மனு நிரகாரிக்கப்பட்டுள்ளது. திலீப் ஜாமீனில் வெளியே சென்றால் சாட்சிகளை கலைத்து, வழக்கை பலவீனமாக்க கூடும் என்கிற போலீஸ் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டே நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் 90 நாட்களுக்குள் இந்த வழக்கு குறித்த சார்ஜ் ஷீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.