ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கு சினிமாவில் ராஜ்கோட்டி என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் சுமார் 400 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டனர். ஒரு கட்டத்தில் ராஜ்-கோட்டி இருவரும் பிரிந்து தனித்தனியாக இசையமைத்து வந்தனர். இவர்களில் கோட்டி, அனுஷ்கா நடித்த அருந்ததி படத்திற்கு இசையமைத்தார்.
தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள யாகம் படத்திற்கு அவர் இசையமைத்துள்ளார். இதுபற்றி இசையமைப்பாளர் கோட்டி கூறுகையில், நான் இசையமைத்த அருந்ததி படத்தின் பாடல்கள் தெலுங்கை விட தமிழில்தான் அதிக வரவேற்பு பெற்றது. அந்த வகையில், இப்போது யாகம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறேன். அந்த படத்தைப்போலவே இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
மேலும், நான் தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வந்தபோது அந்த படங்களின் இசைப்பதிவு சென்னையில்தான் நடைபெறும். அப்போது ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், தேவிஸ்ரீ பிரசாத், தமன் உள்பட இப்போது இசையமைப்பாளர்களாக இருக்கும் பலர் எனது இசையில் இசைக்கருவிகள் வாசித்துள்ளனர். அவர்களெல்லாம் இப்போது பெரிய இசையமைப்பாளர்களாக இருப்பது சந்தோசமாக உள்ளது என்று கூறும் கோட்டி, யாகன் படத்திற்கு பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன். அதனால் இந்த படம் எனக்கு இன்னொரு அருந்ததியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்கிறார்.