ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அஜீத்தை வைத்து காதல் மன்னன், அமர்களம், அட்டகாசம், அசல் படங்களை இயக்கியவர் சரண். இடையில் ஜெமினி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன் வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இதய திருடன், வட்டாரம், மோதி விளையாடு, அசல் படங்களின் தோல்வியால் அடுத்த வாய்ப்பின்றி இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை தானே தயாரித்து இயக்கினார்.
இதில் வினய்யுடன் சமுத்ரிகா, ஸ்வாஸ்திகா என்ற இரு புதுமுகங்கள் நடித்தனர். பரத்வாஜ் இசை அமைத்திருந்தார், கிருஷ்ணராமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மிகுந்த பொருளாதார சிக்கல்களுக்கு இடையில் இந்தப் படத்தை சிரமப்பட்டு முடித்தார் சரண். படம் முடிந்தும் அதனை வெளியிட முடியாமல் தவித்து வந்தார்.
இந்தப் படத்தின் நாயகன் வினய் வில்லனாக நடித்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாலும், அதில் வினய்யின் நடிப்பு பேசப்படுவதாலும் இந்த சூழ்நிலையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சரண். வருகிற 22ந் தேதி படம் வெளிவருவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.