மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
தமிழ்த்திரையுலகில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த பெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படங்களின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. அவற்றில் முக்கியமான படம் ரஜினி நடிக்கும் 'காலா'.
தனுஷின் 'வுண்டர் பார் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்திற்காக சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் மும்பை தாராவி ஏரியாவைப் போன்ற மிகப் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் ஏற்கெனவே பல காட்சிகளை படமாக்கிய இயக்குநர் பா.ரஞ்சித், வேலைநிறுத்தம் காரணமாக மும்பையில் படப்பிடிப்பை நடத்தினார்.
தற்போது ஸ்டிரைக் வாபஸ் ஆனதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் தாராவி செட்டில் படப்பிடிப்பை துவக்கியுள்ளார். இன்றைய படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த செட்டில் காலா படப்பிடிப்பு தொடர்ந்து பல நாட்கள் நடைபெறவிருக்கிறது. இங்கே படப்பிடிப்பு நிறைவு பெற்றதும் இறுதிகட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்த பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளார் என காலா படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.