ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக டுவிட்டர் மற்றும் டி.வி., நிகழ்ச்சி மூலம் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அன்றாட நடப்புகள் மீது கருத்து சொல்லி அரசியல்வாதிகளை அதிர வைக்கிறார். குறிப்பாக ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா சென்ற கமல், அந்த மாநிலத்தின் முதல்வர் பினராய் விஜயன் வீட்டுக்கும் சென்றார். அவரிடம் சில அரசியல் ஆலோசனைகள் பெற்றதாக கூறிய அவர், விரைவில் நேரடி அரசியலுக்கு வருவேன் என்று மறைமுகமாக சொன்னார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் மகளிர் பிரபு தலைவி நடிகை நக்மா, பா.ஜ.கவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் ஆகியோர் கமலை நேரில் சந்தித்து தங்கள் கட்சியில் சேருமாறு மறைமுக அழைப்பு விடுத்தனர்.
இதற்கிடையில் கமல், கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஆர்வம் காட்டுவதாகவும், அதில் இணைய இருப்பதாகவும், அதனால்தான் அவர் கேரள முதல்வரை சந்தித்தார் எனவும் செய்திகள் வெளியாது. இந்த நிலையில் கமல் கேரளாவில் நடக்கும் கம்யூனிஸ்ட் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
வருகிற 16ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அந்த மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசிய மதவாத எதிர்ப்பு கருத்தரங்கு நடக்கிறது. முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடக்கும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கமல்ஹாசன் சிறப்புரையாற்றுகிறாராம். இதில் கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனும் கலந்து கொள்கிறார்.