கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
எம்ஜிஆர்., சிவாஜி என்ற இரண்டு ஜாம்பவான்களின் படங்களுக்கு வசனங்கள் மூலம் உயிர்கொடுத்த பிரபல வசனகர்த்தா ஆர்கே சண்முகம் காலமானார். அவருக்கு வயது 87.
சென்னை, ராயப்பேட்டை, லாய்ட்ஸ் காலனியில் வசித்து வந்த சண்முகம், வயது மூப்பு காரணமாக 3 மாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். நேற்று(செப்., 12) மாலை 6.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
பிரபல இயக்குநர் பி.ஆர்.பந்தலுவிடம் உதவி இயக்குநராக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் சண்முகம். பந்தலு-சிவாஜி கூட்டணியில் உருவான கர்ணன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட வரலாற்று காவிய படங்களில் உதவி இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார் சண்முகம்.
பின்னர் பந்தலு முதன்முறையாக எம்ஜிஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை இயக்கினார். இப்படத்திற்கு வசனகர்த்தாவாக சண்முகத்தை நியமித்தார். பொதுவாக எம்ஜிஆர்., தன்னுடைய படங்களில் பாசிட்டீவ்வான விஷயங்களை எதிர்பார்ப்பவர், இதனால் ஆரம்பத்தில் பந்தலுவிற்கு சண்முகத்தை வசனகர்த்தாவாக நியமிக்க தயக்கம் இருந்தது. ஆனால், படத்தில் முதல்காட்சியே எம்ஜிஆர்., "வெற்றி வெற்றி வெற்றி" என்ற டயலாக்குடன் தான் ஆரம்பிப்பார்.
இது எம்ஜிஆருக்கு பிடித்து போனது. தொடர்ந்து, இப்படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர்., - நம்பியார் இடையேயான வசனக்காட்சிகள் குறிப்பாக "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா....?, சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும், நான் தோல்வியை அறியாதவன், நான் தோல்வியை எதிரிக்கு பரிசளித்த பழக்கப்பட்டவன்" போன்ற வசனங்கள் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பிளஸாக அமைந்தது.
ஆயிரத்தில் ஒருவன் பட வசனங்கள் பெரிதும் பேசப்பட்டதால் தொடர்ந்து "ரகசிய போலீஸ் 115, முகராசி, கன்னித்தாய், தேடி வந்த மாப்பிள்ளை, நீரும் நெருப்பும், ரிக்ஷாக்காரன், நல்லநேரம்" உள்ளிட்ட எம்ஜிஆரின் 16 படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றினார் சண்முகம்.
கலைமாமணி விருது பெற்ற ஆர்கே சண்முகத்துக்கு, எம்ஜிஆர்தான் ஒரு வீட்டை பரிசாக வழங்கினார். லாயிட்ஸ் சாலையில் உள்ள அந்த வீட்டில் தான் ஆர்கே சண்முகம் வாழ்ந்து வந்தார். அவரது உயிரும் அங்கு தான் பிரிந்தது.
சண்முகத்திற்கு தேவி(75) என்ற மனைவியும், 4 பெண் பிள்ளைகளும் உள்ளனர். சண்முகத்தின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று(செப்., 13) மாலை 3 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இன்றைக்கு ரஜினி, கமல், விஜய், அஜித், ஏன் இப்போது வரும் புதுமுக நடிகர்கள் கூட பன்ச் டயலாக்குகள் பேசுகிறார்கள். ஆனால், 40 வருடத்திற்கு முன்பே எம்ஜிஆர்., படம் முழுக்க பன்ச் டயலாக்குகள் கொடுத்த பெருமை சண்முகத்திற்கு உண்டு.