ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்தவரிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து அவரிடம் கேட்டபோது...
"உயிரிழந்த மாணவி அனிதாவின் தற்கொலையை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிரா போராடும் மாணவர்களை விமர்சிப்பவர்களுக்கு காலம் உரிய பதில் அளிக்கும்" என்றார்.
இந்த பேட்டியில் பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்தது போன்று செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எனது முனி 4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள். சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள். நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள். நானும் "காலம் பதில் சொல்லும்" என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன். ஆனால், பா.ஜ.கா.,வுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள்.
சேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம்.. அரசியல் அல்ல. அப்படி இருக்க நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன். அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா? என்றும் கேட்டார்கள். அது கடவுளுக்கும், எனக்கும், அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என்று சொன்னேன். தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.