ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள படமான டிராபிக் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதனை ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் தயாரித்தது. இப்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதில் சரத்குமார் நடித்துள்ளார். அவருடன் அஜய், நெப்போலியன், சுஹாசினி, முனிஷ்காந்த், அஞ்சனா பிரேம் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். ஜேபியார் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம்மோகன் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தை வருகிற 15ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார்கள். தற்போது வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள். விஷால் நடித்துள்ள துப்பறிவாளன், ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும், களத்தூர் கிராமம், யார் இவன் படங்கள் வெளிவருகிறது. இதில் துப்பறிவாளன் படம் சுமார் 500 தியேட்டர்களில் வெளிவருகிறது, மகளிர் மட்டும் 300 தியேட்டர்களில் வெளிவருகிறது. இதனால் சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாவது, வியாபார ரீதியில் வசூலை பாதிக்கும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளின் படி சென்னையில் ஒரு நாள் - 2 படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்கிறது அந்த செய்தி குறிப்பு.