ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு லயோலா கல்லூரியில் நடந்தது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் அறக்கட்டளை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சுசீந்திரன், கரு.பழனியப்பன், "உறியடி" விஜயகுமார், மகிழ்திருமேனி, வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், மோகன் ராஜா, சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், சீனுராமசாமி, மிஷ்கின், ராஜுமுருகன், மாரி செல்வராஜ், நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கலையரசன், தினேஷ், ஜீவி பிரகாஷ், காளி வெங்கட், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:
பல்வேறு தடைகளைத் தாண்டி படித்து வெற்றி பெற்ற ரோகித் வெமூலா, முத்துகிருஷ்ணன் இப்போது அனிதா என மெரிட்டில் தேர்வானவர்களே மரணத்திற்கு உள்ளாகிறார்கள்.. இந்த மரணம் ஒரு வித அச்சத்தை தருகிறது. அனிதாவின் இழப்பை ஒரு தமிழ் குழந்தையின் இழப்பாகவே நாம் பார்க்க வேண்டும், உணர்ச்சிவயப்பட்டு எந்த பலனும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை.
இந்த அரசு என்ன செய்கிறது, முதலில் நம் உணவை சாப்பிடக்கூடாதுன்னு சொன்னார்கள், ரேசன்கார்டை பிடுங்கிவிட்டார்கள், இப்போ நீட் கொண்டு வந்து எளிய மக்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். நாம் என்ன செய்யப்போகிறோம்? பண்பாட்டு ரீதியில் நான் ஒன்று சேரவேயில்லை. அனிதாவை தலித் குழந்தையாக பார்க்காமல் ஒரு தமிழ் குழந்தையாக பார்க்க வேண்டும். இந்த மரணங்கள் மேலும் நிகழாமல் தடுக்க நீட்டை ஒழித்தே ஆக வேண்டும், நாம் ஒன்றாக வேண்டும்.
இவ்வாறு பா.ரஞ்சித் பேசினார்.