ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் அமுதவாணன். அதோடு சினிமாவில் ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து தற்போது பில்லா பாண்டி உள்பட இரண்டு படங்களில் காமெடி ரோலில் நடிப்பவர், நாய் சேகர் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படங்கள் பற்றி அமுதவாணன் கூறுகையில், ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் என்னை நாயகனாக நடிக்க அழைத்தபோது நான் மறுத்தேன். ஆனால் நான்கு பேரில் ஒருவராகத்தான் நடிக்க வேண்டும் என்று சொன்னதால் நடித்தேன். காரணம் எனக்கு ஆக்சன், ரொமான்சை விட காமெடிதான் நன்றாக வரும். அதனால் நான் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவதே இல்லை. எனக்கு செட்டாகக்கூடிய காமெடி ரோலில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன்.
அதனால் தற்போது ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் பில்லா பாண்டி மற்றும் இன்னொரு புதுமுக ஹீரோ நடிக்கும் படத்திலும் காமெடியனாக நடிக்கிறேன். ஆனால் நாய் சேகர் என்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். இது காமெடி படம் என்பதால் நடிக்கிறேன் என்று கூறும் அமுதவாணன், எதிர்காலத்தில் சினிமா, சின்னத்திரை இரண்டிலுமே நல்லதொரு காமெடியனாக நிலைத்து நிற்க வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார்.