இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
நடிகர் ஆர்யாவுக்கு தமிழில் தற்போது ஒரே ஒரு படம் மட்டுமே கையில் இருக்கிறது. அமீர் இயக்கும் சந்தனத்தேவன் படத்தை பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார். கடைசியாக வெளியான கடம்பன் படம் கைகொடுக்கவில்லை. பெரிய பட்ஜெட் படமான சங்கமித்ரா ஆரம்பிக்கவே இல்லை.
இதனால் மற்ற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தி கிரேட் பாதர் என்ற மலையாளப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதோடு கன்னடப் படத்திலும் அறிமுகமாகிறார். அனூப் பண்டாரி இயக்கும் ராஜரத்தா படத்தில் நடிக்கிறார். இது கன்னடம் மற்றும் தெலுங்கில் தயராகும் படம். ஆர்யாவுடன் நிரூப் பண்டாரி, அவந்திகா ஷெட்டி, ஆர்.ரவிசங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இதுகுறித்து ஆர்யா கூறும்போது "எனது நண்பன் அனுப் பண்டாரி படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. அவரது முதல் படமான ரங்கிதரங்கா பார்த்து வியந்தேன். அப்போதே அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்திருக்கிறது. இந்த படத்தில் எனக்கு பவுர்புல் கேரக்டர் கொடுத்திருக்கிறார். என்கிறார் ஆர்யா.