ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அமெரிக்காவின், நியூயார்க் நகரத்தில் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய நாள் அணிவகுப்பு நடைபெறும். இந்தியாவிலிருந்து பிரபலங்கள் அதில் கலந்து கொள்வார்கள். இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய ஏராளமான இந்தியர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான 37வது இந்திய நாள் தென்னிந்திய நட்சத்திரங்களான ராணா டகுபட்டி, தமன்னா இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். நிகழ்வில் நியூயார்க் நகர மேயர் பில் டி பாசியோ-வும் கலந்து கொண்டார். இந்திய தேசப்பற்று பாடல்கள் ஊர்வலத்தில் ஒலித்தன. தேசப்பற்று கோஷங்களை மக்கள் எழுப்பியபடி மக்கள் ஊர்வலத்தில் நடந்து வந்தனர். குழந்தைகள், முதியவர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் ராணா டகுபட்டி இந்திய கலாச்சாரப்படி, வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டது பலரையும் கவர்ந்துள்ளது. அவர் அணிவகுப்பின் கிரான்ட் மார்ஷல் ஆக அறிவிக்கப்பட்டிருந்தார்.
“கிரான்ட் மார்ஷல் ஆக அணிவகுப்பில் பங்கேற்றது பெருமையும், சிறப்பும் வாய்ந்தது,” என ராணாவும், “இந்த விழாவில் கலந்து கொண்டது பெருமையானது,” என்று தமன்னாவும் தெரிவித்துள்ளனர்.