ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவரது கணவர் ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தா ஒரு நிருபர் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அலுரி சக்ரபாணி என்ற ஒரு கதாசிரியர் வேடத்தில் நடிக்கிறார்.
அதாவது, சாவித்ரி லீடு ரோல்களில் நடித்து புகழ்பெற்ற படங்களான மாயா பஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் தான் கதை எழுதியுள்ளார். அதோடு, இந்த படங்களை தயாரித்த நாகிரெட்டியின் விஜயா கம்பைன்சில் இவரும் ஒரு பங்குதாரராம். அந்தவகையில், சாவித்ரியின் கேரியரில் அலுரி சக்ரபாணி கதை எழுதிய படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனால் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் அலுரி சக்ரபாணி கேரக்டருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.