ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வசந்தகால பறவை, சூரியன், திருமூர்த்தி, கல்லூரி வாசல் படங்களை இயக்கிய பவித்ரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் தாராவி. சதீஷ்பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ ஆகிய புதுமுகங்களுடன் சுனு லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். தாராவியில் வாழும் தமிழ் பெண் கேரக்டர். பவித்ரன் மகன் அபய் இசை அமைக்கிறார். படம் பற்றி பவித்ரன் கூறியதாவது:
மும்பை தாராவி பகுதியில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை பின்னணியில் படம் உருவாகியுள்ளது. அங்குள்ள கேபிள் டி.வி, தாதா ஒருவரிடம் 5 தமிழ் இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் ஒருவனை அந்த பகுதியை சேர்ந்த பணக்கார கல்லூரி மாணவி காதலிக்கிறார். இதனால் 5 பேருக்குமே பல பிரச்னைகள் வருகிறது. அந்த பிரச்னைகளிலிருந்து மீண்டு அந்த பெண்ணை கைபிடிக்கிற கதை. தாராவியில் முழு படப்பிடிப்பும் நடந்துள்ளது. மும்பை தமிழர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறோம். என்கிறார் பவித்ரன்.