ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தயாரிப்பாளர்கள், பெப்சி மோதலுக்கு காரணமாக இருந்தது டெக்னீஷியன் யூனியன். மதுரையில் நடந்த பில்லா பாண்டி படப்பிடிப்பை டெக்னீஷியன் யூனியன் நிறுத்தியது எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்தது.
தயாரிப்பாளர்கள் சம்பள பிரச்னை மற்றும் பெப்சி தொழிலாளர்கள் அல்லாதவர்களை வைத்து வேலை செய்யலாம் என்ற அறிவிப்புக்கு பிறகு இறங்கி வந்த பெப்சி, பிரச்னைக்கு காரணமான டென்னீஷியன் யூனியன் நிர்வாகிகளிடம் மன்னிப்பு கடிதம் வாங்கியது. இதிலும் தயாரிப்பாளர் சங்கம் சமாதானமாகவில்லை. தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தது.
இந்த நிலையில் பெப்சி அமைப்பிலிருந்து டெக்னீஷியன் யூனியனை நீக்க முடிவு செய்தது. இதன் முதல் கட்டமாக டெக்னீஷியன் யூனியனுக்கு பெப்சி பொதுச் செயலளார் ஏ.சண்முகம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடித்தில் கூறப்பட்டிருப்பதாவது:
பெப்சியின் அனுமதியில்லாமல் டெக்னீஷியன் யூனியனைச் சேர்ந்தவர்கள் தனிச்சையாக மதுரையில் நடந்த பில்லா பாண்டி படப்பிடிப்பை நிறுத்தி உள்ளீர்கள். இதனால் பெப்சியில் உள்ள மற்ற சங்கங்கள் மிகப்பெரிய அபாயத்தை எதிர் நோக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெப்சியில் எடுக்கப்பட்ட முடிவின்படி டென்னீஷியன் யூனியன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த கடித்திற்கு சரியான பதில் அளிக்காவிட்டாலோ, அல்லது வேறு நடவடிக்கைகளை எடுத்தாலோ டெக்னீஷியன் யூனியன் பெப்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று தெரிகிறது.