ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
போகன் படத்திற்கு பிறகு ஹன்சிகாவின் மார்க்கெட் டவுனாகிவிட்டது. அதனால் மலையாளத்தில் மோகன்லாலின் வில்லன் படத்தில் நடித்தார். அதையடுத்து பிரபுதேவா கொடுத்த ஆதரவில் குலேபகாவலி படத்தில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் சுந்தர்.சியின் இயக்கத்தில் சில படங்களில் நடித்தவர் என்பதால் சங்கமித்ராவில் ஹன்சிகா நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், நயன்தாரா, திரிஷா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகள் மேல்தட்டு ஹீரோக்களுடனான வாய்ப்புகள் குறைந்து விட்டதை அடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து வருகிறார்கள். ஆனால், அந்த மாதிரி வாய்ப்பு ஹன்சிகாவை தேடிச்சென்றபோது நடிக்க மறுத்து விட்டாராம். சிறிய வேடங்கள் என்றாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம், சங்கமித்ரா படம் மீது இன்னமும் ஹன்சிகாவுக்கு நம்பிக்கை இருக்கிறதாம். குலேபகாவலி வெற்றியடைந்தால் அதன்பிறகு தன்னை அந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் காணப்படுகிறாராம்.