ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்திய திரைப்படத் தணிக்கை குழு தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பஹ்லால் நிஹ்லனி பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. மேலும் உத்த பஞ்சாப், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா, உள்ளிட்ட படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் அதிக கெடுபிடி காட்டினார். இதனால் பாலிவுட் திரையுலகினர் இவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் பஹ்லன் நிஹ்லனி இந்திய தணிக்கை குழு தலைவர் பதவியிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் பாடலாசிரியரும், பாடகருமான பரசூன் ஜோஷியை நியமித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தணிக்கை குழுவின் தலைவர் மாற்றத்தை தொடர்ந்து சென்னை தணிக்கை குழுவிலும் மாற்றம் வரலாம் என்கிறார்கள். நடிகை கவுதமி, இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் தணிக்கை குழுவில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.