ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபகாலமாக சினிமா கலைஞர்கள் பெரும்பாலானவர்களுக்கு அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்து வருகிறது. அதை சிலர் நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். அந்தவகையில், தற்போது ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் எதிர்காலத்தில் அரசியலில் களமிறங்கலாம் என்கிற எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது.
இந்தநிலையில், குஷ்பு, ரோஜா, நக்மா உள்ளிட்ட பல நடிகைகள் அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டும் வருகின்றனர். இவர்கள் பட்டியலில் இப்போது அங்காடித்தெரு அஞ்சலியும் இணைவார் என தெரிகிறது. சமீபத்தில் இவர் பார்லிமென்ட்டிற்கு எல்லாம் விசிட் அடித்து வந்திருக்கிறார்.
அதோடு, அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், அரசியல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் ஒவ்வொரு நாளும் அரசியலில் நடப்பதை உன்னிப்பா கவனித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இப்படியொரு செய்தியை அஞ்சலி வெளியிட்டதை அடுத்து அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.