சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
தனுஷ் நடித்துள்ள விஐபி-2 படம் இந்த மாதம் 11-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரேநாளில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் இப்போது தெலுங்கு, ஹிந்தி ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளிப்போய் உள்ளது.
விஐபி-2 படத்தை மலேசியாவில் கணிசமான தியேட்டர்களில் திரையிட உள்ளனர். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் மலேசியாவில் இவ்வளவு தியேட்டர்களில் வெளியாகவில்லையாம். அதனால்தான் தனுஷ், கஜோல் உள்ளிட்ட படக்குழுவினர் அண்மையில் மலேசியா சென்று புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
இதனிடையே விஐபி-2 படத்தின் கேரள விநியோக உரிமையை மாக்ஸ் லேப் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் நடிகர் மோகன்லால் மற்றும் அவரது மானேஜர் பெரும்பாவூர் ஆண்டனியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் கபாலி படத்தை கேரளாவில் இந்த நிறுவனங்கள் தான் வெளியிட்டன. கபாலியைத் தொடர்ந்து இந்த நிறுவனம் வெளியிடும் தமிழ்ப்படம் விஐபி-2 படம்தான். இந்த படத்தை கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடவிருக்கின்றனர்.