ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியா முழுக்க பிரபலமாகி விட்ட நடிகர் பிரபாஸ், தற்போது 35 வயதை தாண்டிவிட்வார். நடிகர் பிரபாஸூம், அனுஷ்காவும் தீவிரமாக காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை பிரபாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது...
பொதுவாக ஒரு நடிகையுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தால் இதுபோன்ற செய்திகள் வருவது சகஜம், நானும் இதை எதிர்பார்த்தேன். இதுபோன்ற செய்திகள் ஆரம்பத்தில் எனக்கு கஷ்டமாக இருந்தது. பின்னர் அதுவே பழகிவிட்டது. நடிகையுடன் திருமணம் செய்யப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. இப்போதைக்கு திருமணத்தை பற்றி நான் யோசிக்கவில்லை, ஆகையால் எனது பெண் ரசிகைகள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ், அடுத்து சாஹோ என்ற படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.