ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் சினிமாவில் பல கலைஞர்களுக்கு அடையாளமாக விளங்கிய சூப்பர் குட் நிறுவனத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் ஜீவா நடிகராக அறிமுகமாமன பின் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், கடந்த 14 வருடங்களில் அவர் நடித்த படங்களில் “ராம், டிஷ்யூம், ஈ, சிவா மனசல சக்தி, கோ, நண்பன்” ஆகிய படங்களைத் தவிர மற்ற படங்கள் அவருக்குப் பேர் சொல்லும் படங்களாக அமையவில்லை. அதிலும் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமாவைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக விழுந்தவர்களும் கிடையாது, எழுந்து நின்றவர்களும் கிடையாது. வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். ஜீவாவைப் பொறுத்தவரையில் சில இயக்குனர்களை நம்பி ஏமாந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மிஷ்கின், கௌதம் மேனன், ரவி கே சந்திரன் போன்ற பிரபலங்கள் கூட ஜீவாவின் வெற்றியை பூட்டு போட்டு பூட்டி விட்டார்கள். அந்தப் பூட்டை இப்போது 'கீ' கொண்டு திறக்க வருகிறார் இயக்குனர் காளீஸ்.
ஜீவா தற்போது நடித்து வரும் 'கீ' படம் 'ஹேக்கர்ஸ்' பற்றிய படமாம். இணையதளங்களை விளையாட்டாக 'ஹேக்' செய்பவராக ஜீவா நடிக்கிறார். இது சம்பந்தமான பல விஷயங்களை ஜீவா தெரிந்து வைத்திருக்கிறார் என்கிறார் இயக்குனர் காளீஸ். இந்த 'கீ'யாவது ஜீவாவிற்கு வெற்றிக் கதைவைத் திறக்கட்டும்.