ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மாற்றான், அனேகன், கவண் என மூன்று படங்களை இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இப்போது நான்காவதாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பையும் கே.வி.ஆனந்துக்குக் கொடுத்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதற்கு விக்ரமும் ஆர்வமாக இருக்கிறாராம்.
'இருமுகன்' படத்துக்குப் பிறகு தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் பிஸியாக இருக்கிறார் விக்ரம். இதில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஸ்கெட்ச்' படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. எப்போது முடியும் என்று தெரியாது.
விரைவில் ஹரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'சாமி 2' படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். அதை முடித்த பிறகு கே.வி.ஆனந்த் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.