ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினி, இயக்கியுள்ள படம் வேலையில்லா பட்டதாரி-2. இந்த படத்திலும் அப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளே இணைந்துள்ளனர். என்றாலும், பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி அவர்தான் வில்லி என்கிறார்கள். அந்த வகையில், இந்த படத்தில் தனுஷ்-கஜோலின் காம்பினேசன் நன்றாக ஒர்க் அவுட்டாகியிருப்பதாக சொல்கிறார் செளந்தர்யா ரஜினி.
அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வசுந்தரா பரமேஸ்வரன் என்ற கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது கஜோல் தான் சரியாக இருப்பார் என்று தோன்றியது. அதேபோல் அவரும் அந்த கதாபாத்திரத்திற்கு இயல்பான நடிப்பை கொடுத்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் ஆண் கேரக்டருடன் ஒரு பெண் கேரக்டர் மோதும் படங்களென்றால், மன்னன், படையப்பாவைத் தான் சொல்ல வேண்டும். அந்த படங்களில் எனது தந்தை ரஜினியுடன் நடித்த விஜயசாந்தி மற்றும் ரம்யாகிருஷ்ணன் ஆகிய இருவரும் எதிரும் புதிருமான வேடங்களில் அற்புதமாக நடித்திருந்தார்கள். அதேமாதிரிதான் இந்த படத்திலும் தனுஷ்-கஜோலின் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. ஆனால் அந்த படங்களின் சாயல் விஐபி-2வில் இருக்காது. இது ஒரு புதிய கோணத்தில் இருக்கும் என்கிறார் செளந்தர்யா ரஜினி.