ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்தும், பல குறும்படங்களை இயக்கியும் அனுபவம் பெற்றவரான ஜி.ஆறுமும் இயக்கி உள்ள படம் புயலா கிளம்பி வர்றோம். ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் சார்பில் வி.ஹரிஹரன் தயாரித்துள்ளார். தமன், மதுஸ்ரீ, ஆர்.என்.ஆர் மனோகர், சிங்கம்புலி, திருமுருகன், ரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ்தனா இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஜி.ஆறுமுகம் கூறியதாவது:
இது மதுரை மண் சார்ந்த கதை. படித்து விட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் கோழைகள் அல்ல அவர்களைச் சீண்டி விட்டால் தாங்க முடியாது என்று சொல்கிற கதை . படித்த இளைஞர்களின் கோபத்தின் முன் எப்படிப்பட்ட பலசாலியும் வீழ்ந்து விடுவான் என்று சொல்கிற கதை. மதுரைப் பகுதியில் நடக்கும் கதை என்றாலும் மதுரை, சென்னை, கொடைக்கானல், பாண்டிச்சேரி போன்ற பல ஊர்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பல நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம்.
மதுரை கதை களம் என்றால் வன்முறை தான் என்கிற நிலையை மாற்றி அழகான காதலையும் சொல்கிறோம். அதனால் தான் படத்துக்குத் தணிக்கை முடிந்து யூ சான்றிதழ் தந்துள்ளது. வருகிற 28-ம் தேதி மதுரைக்காரய்ங்க புயலா கிளம்வி வர்றோம் என்கிறார் இயக்குனர் ஆறுமுகம்.