கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
கமல்ஹாசன், ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை வலுவாக வைத்து வருகிறார். அதை நிரூபியுங்கள் என்று கேட்ட அமைச்சர்களுக்கு பதில் சொல்லும் வகையில் தனது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர்களின் இணையதள முகவரிக்கு அதனை அனுப்பி வைக்கவும் என்று கேட்டிருந்தார்.
இதையடுத்து தமிழக அரசின் இணையதளங்களில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், இமெயில் முகவரி, அலுவலக விலாசம் போன்றவை அழிக்கப்பட்டன. இதனால் புகார்களை யாருக்கு அனுப்புவது என்று தெரியாமல் ரசிகர்களும், பொதுமக்களும் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில் கமல் நேற்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஊழல் புகார்களை அமைச்சர்களின் முகவரிக்கு அனுப்ப முடியாவிட்டால் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பி வையுங்கள்" என்று கூறியுள்ளார்.
அதோடு ஊழல் தடுப்பு பிரிவின் முகவரியையும், தொலைபேசி எண்களையும் தனது ரசிகர் மன்றங்களுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தங்கள் பகுதியை சேர்ந்தவர்களை சந்தித்து அவர்கள் ஊழலால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை மனுவாக எழுதி வாங்கி வருகிறார்கள். விரைவில் அதனை ஊழல் தடுப்பு பரிவுக்கு அனுப்பி வைக்க இருக்கிறார்கள்.