மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
துடிக்கும் இதயமும், இவர் பெயர் கேட்டால் நடிக்கும். கேமரா முன் முகம் சிவந்தால், எரிமலை கூட வெடிக்கும். அதனால் தான், ஏற்ற பாத்திரங்களுக்கே, அவரை பிடிக்கும். சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த அந்த மூன்றெழுத்து, மூச்சுக் காற்றிருக்கும் வரை மறையாது. உடல், பொருள், ஆவி அத்தனையும், தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்த அந்த அதிசய பிறவிக்கு பெயர் "சிவாஜி. தன்னை படைத்த கடவுளுக்கே, தன் நடிப்பில் முகம் கொடுத்தவர்.
தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சின்னையா மன்றாயர், தொழில் நிமித்தம் காரணமாக, விழுப்புரத்தில் குடியேறியுள்ளார். அங்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால், 1927 அக்., 1ல், ஆங்கிலேய நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது; அதே நாளில் தான், அவருக்கு நான்காவது மகனாக பிறந்தார், கணேசன்.
நாடக ஆசை காரணமாக, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின், பால கான சபாவில் சேர்ந்துள்ளார்; அப்போது அவருக்கு, 10 வயது! சிவாஜி கண்ட, இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில், சிவாஜியாக நடித்தார்; அவரின் நடிப்புத் திறனை மெச்சிய, ஈ.வெ.ரா., அவரை, சிவாஜி கணேசன் என, அழைத்தார்.
பராசக்தி திரைப்படத்தில் சக்சஸ் என்ற முதல் வசனத்தைப் பேசி நடிப்பில் பிரபலமானார். அந்த வார்த்தையே அவரின் வாழ்க்கையை சக்சஸாக மாற்றியது. நவரச திலகமாக ஒன்பது வேடங்களில் நடித்த நவராத்திரி, அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாசமலர், செக்கிழுத்த செம்மலாக நடித்த கப்பலோட்டிய தமிழன், புரட்சி வீரனாக நடித்த சிவந்தமண் போன்ற எண்ணற்ற படங்கள் சிவாஜி கணேசனின் பெருமையை எடுத்துக் கூறும்.
கடவுள்களையும், சுதந்திர போராட்ட வீரர்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர். சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்த, சிவாஜி கணேசனின் இறந்த தினம் இன்று. காலத்தால் மறக்க முடியாத அந்த மாபெரும் நடிகர் மண்ணை விட்டுமறைந்தாலும், மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றிருப்பார்.