ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கேளிக்கை வரி விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திரையரங்களுக்கு வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி கட்டணத்துடன் மாநில அரசின் 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் 4 நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.100 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரி தொடர்பாக குழு அமைத்து ஒரு முடிவு எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கேளிக்கை வரி தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்...
கேளிக்கை வரி தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது, இந்த விஷயத்தில் நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறோம். தொடர்ந்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில் தமிழ் சினிமாவை வளர்ச்சி அடைய செய்யவே அரசு உதவ வேண்டும். 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்தால் நிச்சயம் திரைத்துறை முடங்கும். படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் நிச்சயம் அதிக கட்டணம் வசூலித்து நோகடிக்க மாட்டோம். ஆன்லைன் டிக்கெட் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தியேட்டர்களில் விற்கப்படும் தின்பண்டங்களின் அதிக விலை குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. இதுதொடர்பாக அபிராமி ராமநாதனிடம் நாங்களும் ஒரு கோரிக்கையாக தான் வைக்க முடியும்.
இவ்வாறு விஷால் கூறினார்.