ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மாஜி ஹீரோயினான கஸ்தூரி தற்போது மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். சிம்புவின் ஏஏஏ உள்பட சில படங்களில் நடித்திருக்கும் அவர், சமீபத்தில் ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து ஒரு சர்ச்சையான கருத்தினை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு எழுந்தது. இணைய பக்கத்திற்குள் சென்று கஸ்தூரியை கண்டபடி விமர்சித்தனர். அதனால் அந்த விசயத்தை தொடர விரும்பாத கஸ்தூரி, அதையடுத்து நான் தவறான நோக்கத்துடன் அப்படி பதிவு செய்யவில்லை என்று ஜகா வாங்கினார். அதோடு, ரஜினியை நேரில் சந்தித்து அந்த சர்ச்சைக்கு முழு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், நேற்று கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலியின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தரிவித்துள்ளார் கஸ்தூரி. அதோடு, உங்களை சந்திப்பதற்கு முன்பு வரை நான் உங்களது ரசிகையாக இருந்தேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் சந்தித்த பிறகு அவரது ரசிகை இல்லையா? - என்று கேட்பது போல் அந்த கருத்து அமைந்துள்ளதால், கங்குலியின் ரசிகர்கள் மத்தியில் கஸ்தூரியின் இந்த கருத்து சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.