சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
'கோலிசோடா', 'பசங்க' முதலான படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'உறுதிகொள்'. 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆர்.அய்யனார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மேனகா நடிக்கிறார்.
அறிமுக இசை அமைப்பாளர் ஜூட் லெனிகர் இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றபோது, ஜி.எஸ்.டி.வரியால் சினிமா பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், தமிழில் பெயர் வைத்து வரிவிலக்கு பெறுவதற்காக அந்த துறையை சார்ந்த மந்திரிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை குறித்தும் மேடையில் பரபரப்பாக பேசினார் மனசூரலிகான்.
அதுமட்டுமல்ல, “அதாகப்பட்டது மகாஜனங்களே படத்திற்கு 4.50 லட்சம், வனமகன் படத்திற்கு 15 லட்சம், காற்று வெளியிடை படத்திற்கு 50 லட்சம், சிங்கம்3 படத்துக்கு 60 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிக் கொண்டு தான் கேளிக்கை வரி விலக்கு அளித்தார் சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர்” என்றும் போட்டுத்தாக்கினார்.
மன்சூரலிகானின் அதிர பேச்சினால் 'உறுதிகொள்' ஆடியோ விழா கொஞ்சம் பரபரப்பானது.